ஜலகண்டாபுரம், ஏப்.24 : ஜலகண்டாபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 33டன் கொப்பரை ₹25லட்சத்திற்கு ஏலம் போனது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க, கொங்கணாபுரம் கிளை சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில், ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 600 மூட்டைகளில் 33ஆயிரம் கிலோ கொப்பரைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இவை தரத்திற்கு ஏற்றார் போல், முதல் தரம் குறைந்த பட்சமாக கிலோ ₹75.45 முதல் அதிக பட்சமாக ₹100.10 வரையும், 2ம் தரம் குறைந்த பட்சமாக கிலோ ₹52.10 முதல் அதிக பட்சமாக ₹67.40 வரையிலும் ஏலம் போனது. இதில் மொத்தம் 33டன் கொப்பரை ₹25 லட்சத்திற்கு ஏலம் ேபானது.