×

2 நாள் மழைக்கு பிறகு கரூரில் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்மக்கள் கடும் அவதி

கரூர், ஏப். 23: கடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு திரும்பவும் கரூரில் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது.காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய லேசான அளவு மழை பெய்தது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் வெயில் வாட்டி வதக்கிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக, கரூர் குளிர்ச்சியான தட்பவெப்பநிலைக்கு  மாறியது.  தோடு, வெயிலின் தாக்கமும் குறைவாகவே இருந்தது.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதலே சுட்டெரிக்கும் வெயில் கரூர் மாவட்டம் முழுதும் வாட்டத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : hurricanes ,Karur ,
× RELATED கரூர்- மூக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை