×

மரம் விழுந்து முதியவர் காயம்

கம்பம், ஏப். 22:  கம்பம் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சாலையோரத்தில் பழமையான ஆலமரம் உள்ளது. நேற்று மரத்தின் கிளை திடீரென ஒடிந்து விழுந்தது. இதில் அவ்வழியாக சென்ற கம்பம் சி.எம்.எஸ் நகரைச்சேர்ந்த பழனிக்குமார்(60) மீது விழுந்தது. இதில் சிறுகாயத்துடன் அவர் உயிர்தப்பினார். கம்பம் தெற்கு போலீசார் சாலையில் கிடந்த மரத்தை விரைந்து வந்து அகற்றினர். நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால் அங்கு ஆட்கள் இல்லாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags : elderly ,
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு