×

தரங்கம்பாடி அருகே சிற்ப தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

தரங்கம்பாடி, ஏப்.17: தரங்கம்பாடி அருகே சிற்பத்தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மாமாங்குடி சிவன்கோவில் தெருவில் வசிப்பவர் பாண்டியன்(35) சிற்பத்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மயிலாடுதுறையில் உள்ள மாமனார் வீட்டிற்கு பிரசவத்திற்கு சென்றுள்ள மனைவியை பார்க்க சென்றார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே பாண்டியன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பிரோவில் இருந்த 12பவுன் தங்க நகையையும் காணவில்லை. பாண்டியன் இது குறித்து பொறையார் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நாகையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையிட்டனர். மோப்பநாய் வீட்டிலிருந்து சிறிதூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. மேலும் நாகையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


Tags : sculptor worker ,Thangangambadi ,
× RELATED பள்ளிகள் திறந்தாச்சு... மாணவிகள்...