×

நாகப்பட்டினம் அருகே பரிதாபம் கணவருடன் தகராறில் மனைவி தற்கொலை

 

நாகப்பட்டினம், மே 27: திருமருகல் அருகே கட்டுமாவடி புறாக்கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கீதா (40). திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவி இடைய தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த வீட்டில் தனியாக இருந்தபோது கீதா தூக்கிட்டார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கீதாவை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்தனர். கீதாவில் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post நாகப்பட்டினம் அருகே பரிதாபம் கணவருடன் தகராறில் மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Suresh ,Katumavadi ,Tirumarugal ,Geeta ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம்,...