×

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு கோவிந்தபேரி மனோ கல்லூரி தரம் உயர்த்த நடவடிக்கை

வீரவநல்லூர், ஏப். 16: சேரன்மகாதேவி ஒன்றிய பகுதியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த நெல்லை அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், கோவிந்தப்பேரி மனோ கல்லூரி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், நேற்று காலை அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கங்கனாங்குளத்தில் காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கிய அவர், கரிசல்பட்டி, வேலியார்குளம், ஓடக்கரை, பட்டங்காடு, வெங்கட்ரெங்கபுரம், கீழ உப்பூரணி, மேல உப்பூரணி, திருவிருத்தான்புள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.பிரசாரத்தில் அவர் பேசுகையில், கோவிந்தப்பேரி மனோ கல்லூரி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்பி, முருகையா பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கம், சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் கருத்தப்பாண்டி, அரசு வழக்கறிஞர் சிவலிங்கமுத்து மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றன

Tags : Govindarari Mano College ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது