×

பண்ருட்டியில் ரயில் தண்டவாளம் அருகே படுகாயங்களுடன் வாலிபர் சடலம்.

பண்ருட்டி, ஏப். 16: பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சண்முகா நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் விஜயகுமார் (21). பி.காம் பட்டதாரியான இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இரவு வரை அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தின் அருகே விஜயகுமார் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் டிஎஸ்பி நாகராஜன் மற்றும் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலமாக கிடந்த விஜயகுமாரின் தலையில் பெரிய அளவில் காயம் காணப்பட்டது. கையும் உடைந்து காணப்பட்டது. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் கிளப்பி உள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : train ravine ,Panruti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு