×

பணநாயகத்தை ஒழிக்க மக்கள் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்

சின்னசேலம், ஏப். 12:  கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தியாகதுருகம் ஒன்றிய கிராமங்களான முடியனூர், குரூர், விருகாவூர், பொரசகுறிச்சி, கனங்கூர், ஒகையூர், ஈயனூர், அச
களத்தூர், வேளாக்குறிச்சி, வரஞ்சரம், கண்டாச்சிமங்கலம், நாகலூர், வடபூண்டி, கொங்கராபாளையம், உடையாநாச்சி, உச்சிமேடு, கூத்தக்குடி, எறஞ்சி, கூந்தலூர், குருபீடபுரம், நின்னையூர், கொட்டையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்
களில் திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி திறந்த வேனில் நின்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அவருடன் வேந்தர் டிவி நிறுவனர் ரவிபச்சமுத்து, ரிஷிவந்தியம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி
கேயன், மவுண்ட்பார்க் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மணிமாறன் ஆகியோரும் சென்று வாக்கு சேகரித்தனர்.

 அப்போது வேட்பாளர் கவுதமசிகாமணி பேசுகையில் உங்களின் உற்சாக வரவேற்புக்கு நன்றி. நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். பணநாயகத்தை ஒழிக்க வேண்டும் என்றால் நீங்கள் ஜனநாயக வழியில் செல்லும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். அதைப்போல வேந்தர் டிவி நிறுவனர் ரவிபச்சமுத்து பேசுகையில் நமது வேட்பாளர் கவுதமசிகாமணி கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி தருபவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ஏகாம்பரம், அண்ணாதுரை, மலையரசன், கணேஷ், சுப்பிரமணியன், உத்திரகுமார், காமராஜ், முருகன், விஷ்ணு, தாமோதரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Tags : Udayasuriya ,
× RELATED காங்கயம் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதயசூரியனை ஆதரியுங்கள்