நாகர்கோவில், ஏப்.10 : தேரேகால்புதூரில் உள்ள ஷாய்ஜீவன் கருத்தரித்தல் மையம், நிவாசா மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் மகப்பேறு மகளிர்நல மருத்துவ சங்கத்தின் ஒத்துழைப்போடு வடசேரியில் செயற்கை கருவூட்டல் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி டீன்(பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து ெகாண்டு குத்துவிளக்கேற்றினார். டாக்டர் நிவாசன் மற்றும் டாக்டர் சுதா வாசன் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் மகப்பேறு மகளிர்நல மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் மினிகோபால், செயலாளர் டாக்டர் மாயா கோபால் ஆகியோர் கலந்து ெகாண்டனர். இதில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த டாக்டர்கள் ஆ்ய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். விழா ஏற்பாடுகளை டாக்டர் நிவாசன், டாக்டர் சுதா வாசன் மற்றும் நிவாசா மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.