×

பைக் விபத்தில் வாலிபர் பலி

விருத்தாசலம், ஏப். 9: விருத்தாசலம் அருகே உள்ள தொரவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் ஜேம்ஸ்(27). இவரது உறவினரான இலங்கியனூரைச் சேர்ந்த தேவமாணிக்கம் மகன் ஆனந்தராஜ்(20) ஆகிய இருவரும் நேற்று பைக்கில் தொரவளூரிலிருந்து இலங்கியனூருக்கு சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஜேம்ஸ் ஓட்டிக் கொண்டு சென்றார். பின்னால் ஆனந்தராஜ் அமர்ந்துகொண்டு சென்றுள்ளார். அப்போது மங்கலம்பேட்டை அருகே பிஞ்சனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது ஆனந்தராஜை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் இறந்தார். இதுகுறித்த மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : guy ,bike accident ,
× RELATED ஷ்ரேயாஸ் வருகை டெல்லிக்கு பெரிய பலம்: பயிற்சியாளர் கைப் உற்சாகம்