×

சோழமாதேவியில் தொடரும் மண் கடத்தல்

உடுமலை,ஏப்.8: உடுமலை அருகே உள்ள சோழமாதேவியில் மண் வெட்டி கடத்துவது தாராளமாக நடந்து வருகிறது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் வருவாய்த்துறையினர் தேர்தல் பணிகளில் பிசியாக உள்ளனர். இதை பயன்படுத்தி மணல் கொள்ளையர்கள் வாகனங்களில் மணலை கடத்தி செல்கின்றனர்.சோழமாதேவியில் வெட்டப்படும் மண், செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அனுமதி பெற்று மண் எடுக்க 3 அடி வரைதான் தோண்ட வேண்டும். ஆனால் 3 அடிக்கும் அதிகமாக தோண்டி உள்ளனர். இதனால் அப்பகுதி பள்ளமாக காட்சி அளிக்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Soil migration ,Cholamadevi ,
× RELATED காட்டுப்பன்றிகளால் நெற்பயிர் சேதம்