திருத்துறைப்பூண்டி, ஏப்.4: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலுள்ள 32 ஊராட்சிகளில் அரசு கால்நடை பராமரிப்பு துறை மன்னார்குடி கோட்டம் சார்பில் 16வது சுற்று கோமாரி நோய்தடுப்பூசி முகாம் 15ம் தேதி முதல் தொடங்கி காலை, மாலை வேளைகளில் நடைபெற்று வருகிறது. இம்முகாம் நேற்று பாமணி, தேசிங்குராஜபுரம் ஆகிய பகுதிகளில் கால்நடை மருத்துவர் ராமலிங்கம் தலைமையில் கால்நடைஉதவி மருத்துவர்கள் காவ்யா, விஸ்வேந்தர், ரேவதி, அகிலா மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் 700 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். இன்றுடன் கோமாரி நோய்தடுப்பூசி முகாம் நிறைவு பெறுகிறது. முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இயலாதவர்கள் இந்த மாத இறுதி வரை கால்நடை நிலையங்களை அணுகி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்று கால்நடை மருத்துவர் ராமலிங்கம் தெரிவித்தார்.