×

நாகை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் ஆவராணியில் தீவிர பிரசாரம்

நாகை, ஏப்.4: நாகை மக்களவை தொகுதியின்  அதிமுக வேட்பாளர் சரவணன்  நாகை ஒன்றிய பகுதியில்  தீவிரமாக வாக்குகள் சேகரித்தார். நாகை நடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் தழை சரவணன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீசெல்வம்,  அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ் உள்ளிட்டோர்  வாக்கு சேகரித்து வருகின்றனர்.நாகை மக்களவை தொகுதி  நாகை  சட்ட மன்ற தொகுதியில் ஏற்கனவே திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பேரூர் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இதையடுத்து நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் தாழை சரவணன்  நாகை ஒன்றியம் ஆவராணியில் தனது வாக்குசேகரிப்பை தொடங்கினார். அதைத் தொடர்ந்து புதுச்சேரி, ஆலங்குடி, வடுகச்சேரி, செம்பியன்மகாதேவி, அகலங்கன், குறிச்சி, வடவூர், கருவேலங்கடை, மகாதனம், ஒரத்தூர், அகரஒரத்தூர், பாப்பாக்கோயில் அக்கரைப்பேட்டை, வடக்குபொய்கைநல்லூர், தெற்குபொய்கைநல்லூர் ஆகிய ஊராட்சிகளின்  வாக்கு சேகரித்தார். அதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியிலும் வாக்கு சேகரித்தார்.  

அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயபால், நாகை நகர செயலாளர் கதிரவன், உள்ளிட்ட பலர் இருந்தனர். அப்போது வேட்பாளர் தழைசரவணன் வாக்கு சேகரித்து பேசுகையில், பலமான கூட்டணியில் எனக்கு அதிமுக தலைமை நாகை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.  அதிமுக கூட்டணி  வெற்றி  பெற்றால்  மத்தியில் நிலையான ஆட்சி அமையவும், மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறவும்  நாகை நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

Tags : constituency ,Lok Sabha ,Saravanan ,scandal ,
× RELATED நீலகிரி, ஈரோட்டை தொடர்ந்து...