×

மூதாட்டியிடம் 7 பவுன் நகை திருட்டு

திருக்கோவிலூர், ஏப். 3: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மதுரவல்லி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி சந்திரலேகா (60). இவர் சம்பவத்தன்று உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து பஸ் ஏறி திருக்கோவிலூர் வந்தார். அப்போது அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு திருவண்ணாமலைக்கு செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கொண்டு வந்த பையை பிரித்து அதில் வைத்திருந்த 7 பவுன் நகை, ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சந்திரலேகா திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை