×

தொழில் அதிபர்களிடம் அமமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார்

கள்ளக்குறிச்சி, மார்ச் 29:     கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கோமுகிமணியன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், மாநில செயலாளருமான பிரபு தலைமையில் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். கள்ளக்குறிச்சி ஏகேடி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன், ஆர்கேஎஸ் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி, தொழில் அதிபர்கள் டிவிஎஸ் ரவி, பஜாஜ் கம்பெனி மலர்வாணன், அம்மன் மோட்டார்ஸ் கந்தசாமி, சத்தியாமுரளி, அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சீனிவாசன், அரிசி ஆலை உரிமையாளர் ஜெயராமன், ரியல் எஸ்டேட் வேலு, தொழில் அதிபர்கள் நடராஜன், கார்த்திகேயன், அதிமுக வழக்கறிஞர் சங்க தலைவர் சின்னதம்பி, டாக்டர்கள் ரமேஷ், ரவிச்சந்திரன், விஸ்வநாதன் மற்றும் 100க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்கள். அப்போது மாவட்ட அவை தலைவர் பாண்டியன், நகர செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் பால்ராஜ், சீனுவாசன், வஜ்ஜிரவேலு, பரத், சம்பத், தனலட்சுமி, கல்லை ரமேஷ், மகளிர் அணி செல்வி, நகர துணை செயலாளர் முஸ்தப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : candidate ,industrialists ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்