புதுச்சேரி, மார்ச் 29: புதுவையில் சுதேசி மற்றும் பாரதி மில் தொழிலாளர்கள் 8 மாத சம்பள பாக்கி மற்றும் தீபாவளி போனசை வழங்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கஞ்சி காய்ச்சி எதிர்ப்பு, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் பிச்சை எடுக்கும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை.இதனால் போராட்டத்தை தொடர்ந்துள்ள சுதேசி, பாரதி மில் ஊழியர்கள் 10ம் நாளான நேற்று சுதேசி மில் ஆலை வாயில் முன்பு சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஊழியர்கள் கவர்னர், முதல்வருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.