×

பூதப்பாண்டி அருகே மண்ணில் புதைந்த பெயின்ட் லாரி

பூதப்பாண்டி, மார்ச் 21:  திருநெல்வேலியில்  இருந்து பெயின்ட்  ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று காலை பூதப்பாண்டியை  அடுத்த திட்டுவிளை - துவரங்காடு சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது  டிரைவர் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட திருப்பினார்.  இதில் லாரி  அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலையோரம் குழாய்கள்  பதிக்கப்பட்டிருந்த மண்ணில் புதைந்தது. இதனால் லாரி ஒரு பக்கமாக சரிந்து  விபத்துக்குள்ளானது. இதையடுத்து லாரியில் இருந்த பெயின்ட் பக்கெட்டுகள்  கீழே இறக்கப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது. இந்த  சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : soil ,boltpandi ,
× RELATED திருப்பூரில் என் மண் என் மக்கள்...