×

செல்போன் மூலம் டார்ச்சர் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

தேனி, மார்ச் 12: திருமணமான பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி பொம்மையக்கவுண்டன்பட்டியில் குடியிருப்பவர் சதாசிவம் மனைவி பிரியா(32). அல்லிநகரம் மச்சால் தெருவில் குடியிருப்பவர் நாராயணன் மகன் மணிகண்டன்(23). இவர் பிரியாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிவந்துள்ளார். இதனை பிரியா கண்டித்தும் ஆபாசமாக பேசுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில் அல்லிநகரம் அரசு பள்ளி அருகே டூவீலரில் சென்ற பிரியாவை வழிமறித்த மணிகண்டன், தான்தான் செல்போனில் பேசியவன் எனவும், தன்னை எதுவும் செய்யமுடியாது எனவும் தன்னை பற்றி வெளியில் சொன்னால் தீவைத்து கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் பிரியா  புகார் அளித்தார். இதன்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : pornographer ,
× RELATED வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது