×

கலை இலக்கிய மேம்பாட்டு உலகப்பேரவை சார்பில் விருது படைப்பாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு


நாகர்கோவில், மார்ச் 8:  கலை இலக்கிய மேம்பாட்டு பேரவை மேலாண்மை  இயக்குநர் பகவதிபெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலை இலக்கிய மேம்பாட்டு பேரவையின் ஆண்டுவிழா வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இலக்கிய பணிகள், சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல்,  கவிதை போட்டி, சிறந்த எழுத்தாளர்களுக்கு  விருது மற்றும் பணமுடிப்பு வழங்கும் விழா ஆகியன நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் இளம் கலைஞர்களை  ஊக்குவிக்க சிறந்த கவிதை நூல்களுக்கு விருது வழங்கப்படுகிறது. மரபு கவிதைகள், வசன கவிதைகள், ஹைக்கூ கவிதைகளுக்கு தனித்தனியாக விருதும், பண முடிப்பும் வழங்கப்படும்.எனவே படைப்பாளிகள் தங்களது படைப்புகளை 3 பிரதிகளும், சுய விபர குறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி போன்றவற்றை தனிதாளில் எழுதி, அத்துடன் நுழைவு கட்டணமாக ₹100ஐ மணியார்டர் அல்லது டி.டி மூலம் பகவதிபெருமாள் என்ற பெயருக்கு ஆட் வேர்ல்ட் பட்டேல் பில்டிங், நீதிமன்ற சாலை, நாகர்கோவில் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுபோல், சிறந்த மாத இதழ், எழுத்தாளர்கள், தமிழ் இலக்கிய அமைப்புகள், மாநில அளவில் பல்துறை சாதனையாளர்கள் தக்க சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Award creators ,Art Literary Development World ,
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...