×

மணல் திருட்டு இருவர் கைது

கம்பம், மார்ச் 8: கம்பம் அருகே சுருளிப்பட்டி கிழக்குப்பகுதி மேகமலை அடிவார பகுதிகளில் உள்ள நீரோடைகளில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடப்பதாக ராயப்பன்பட்டி எஸ்.ஐ ஜெய்கணேசுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை அவர் தலைமையில் போலீசார் சுருளிப்பட்டி யானைகெஜம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இரண்டு டிராக்டர்களில் அரசு அனுமதியின்றி மணல் திருடி வருவது தெரிய வந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருடிய சுருளிப்பட்டியை சேர்ந்த மாயக்கண்ணன் மகன் சதீஷ்குமார்(31), ஜெயக்கொடி மகன் சுரேஷ் (எ) வல்லரசு என்பரை கைது செய்தனர்.

Tags : sailors ,
× RELATED ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் கப்பலின் கேரள பெண் மாலுமி நாடு திரும்பினார்