×

திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் மக்கள் அளித்த 500 கோரிக்கை மனுக்கள் டிஆர்ஓவிடம் எம்எல்ஏ வழங்கினார்

மன்னார்குடி, மார்ச் 7: திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் கடந்த சில நாட்களாக எம்எல்ஏ ஆடலரசன் தலைமையில் நடை பெற்று வந்தது. கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் மக்கள் அளித்த 500  கோரிக்கை மனுக்களை எம்எல்ஏ ஆடலரசன் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாளை நேரில்  சந்தித்து வழங்கினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் (பொ ) பால்துரை உடனிருந்தார்.

Tags : MLA ,DMO ,panchayat meeting ,DMK ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...