உளுந்தூர்பேட்டை, மார்ச் 7: உளுந்தூர்பேட்டை காவல்சரகத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை, எடைக்கல், எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்திற்கான புதிய இன்ஸ்பெக்டராக உதயகுமார் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட மாறுதல் பெற்று வந்துள்ள புதிய இன்ஸ்பெக்டரை சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இங்கு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.