×

கள்ளக்குறிச்சி ஏகேடி பொறியியல் கல்லூரியல் ரத்ததான முகாம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 7:   கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பொறியியல் கல்லூரி மற்றும் கள்ளக்குறிச்சி நகரஅரிமா சங்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்தவங்கி ஆகியவை சார்பில் ஏகேடி பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. அரிமா சங்கத்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஏகேடி கல்லூரி முதல்வர் மனோன்மணி வரவேற்றார். அரிமா அசோக்குமார் சோடியா முகாமை துவக்கி வைத்தார். சர்வதேச சமாதானதூதர் ஆல்வின்ரோலண்ட்திமோதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  இம்முகாமில் 105 மாணவ, மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.முகாம் ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் லிஸி, அரசு மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பழமலை, ரத்ததான முகாம் தலைவர் மணிவாசகம், கல்லூரி துறைதலைவர்கள் மணிகண்ணன், பாலாஜி, குலசேகரபாண்டியன், ராஜாராம், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். டாக்டர் பிரபு நன்றி கூறினார்.

Tags : Kallakurichi AG Engineering College Rathana Camp ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை