கடவூர், மார்ச் 6: கடவூர் அடுத்த காணியாளம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டிடம்
திறப்பு விழா நடந்தது. காணியாளம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 30 படுக்கை வசதியுடன் கூடிய புதிய கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். பின்னர் டிஆர்ஒ சூரியபிரகாஷ் தலைமையில் எம்எல்ஏ கீதா புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆர்டிஓ லியாகத், ஒன்றிய செயலாளர் நாகப்பன், துணைச் செயலாளர் பிரபாகரன், ஊராட்சி செயலாளர் காளிதாஸ், மருதை, வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார், டாக்டர்கள் வினோத், மணிகண்டன், அபிநயா, சகுந்தலா, மோனிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.