×

நித்திரவிளையில் சுற்றுச்சூழல் தினம்

நித்திரவிளை: உலக சுற்று சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இந்திரா பவுண்டேஷன் சார்பில் மரம் நடுதல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நித்திரவிளையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திரா பவுண்டேஷன் நிறுவனர் ஜஸ்டின் தலைமை வகித்தார். சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் பிபின்தாஸ் முன்னிலை வகித்தார்.   மாணவி  காயத்திரி வரவேற்றார். குளச்சல் ஏஎஸ்பி கார்த்திக்  குத்துவிளக்கேற்றி, மரக்கன்று நட்டார். தூத்தூர் கல்லூரி முதல்வர் ஹென்றி, நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ராஜ், ஏழு தேசம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏசுபாலன்,

குமரி அறிவியல் பேரவை ஒருங்கிணைப்பாளர் வேலைய்யன், ஐ.நா. சர்வதேச இளைஞர் கவுன்சில் உறுப்பினர் ஜெஸ்டின் ஆன்றணி, நாகர்கோவில் அடர்வனமும் நன்னீரும் நிறுவனர் துர்கா திரவியம், ஏழு தேசம் கிராம நிர்வாக அலுவலர் தர்ஷியா உட்பட பலர் பேசினர். பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாணவி பிரனையா நன்றி கூறினார்.

Tags : Environment Day ,bedroom , Sleep, environmental day
× RELATED சுற்றுச்சூழல் தினத்தில் கஞ்சா செடி நட்ட வாலிபர்கள்