×

மயான பாதை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை, பிப். 28:  உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஈஸ்வரகண்டநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் பொதுமக்கள் மயானப்பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்தும், இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், கிராமப்புறங்களில் பாழடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். முருகதாஸ், வினாயகமூர்த்தி, சதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு கலியமூர்த்தி, மாநில துணைத் தலைவர் ராஜசங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் பரத், சிலம்பரசன் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Demonstration ,formation ,
× RELATED ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் 100...