×

ஆக்கிரமிப்புகள் அதிரடிஅகற்றம்

சங்கராபுரம், பிப். 27: சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூர் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுச்செல்வி தலைமையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடம் மற்றும் வீடுகளை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது, அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் வீட்டை இடிக்க கூடாது என்று தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல்
இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : shootout ,
× RELATED துப்பாக்கிச்சூடு 2ம் ஆண்டு...