களக்காடு, பிப். 27: களக்காடு கே.ஏ.எம்.பி.மீரானியா மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் பீர்முகம்மது தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்யாகத் அலிகான் வரவேற்றார். தொழிலதிபர் தாஜ் உசேன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், அதிக மார்க் எடுத்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் நாகூர்மீரான், ஆசிரியர்கள் தேவசீலன், ஜெபசுதா, திவாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.