×

திருமாநிலையூர் ரவுண்டானா சிக்னல் பயன்பாட்டிற்கு வருமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கரூர்,பிப்.12: கரூர் திருமாநிலையூர் ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து அமராவதி ஆற்றுப்பாலத்தை கடந்ததும் வரும் பகுதி திருமாநிலையூர் பகுதியாகும். கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த ரவுண்டானா வழியாக செல்கிறது. இதே போல், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் அனைத்தும் இதன் வழியாகத்தான் செல்கிறது. மேலும், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் கரூர் நகரப்பகுதிக்குள் செல்லாமல் திருமாநிலையூர் ரவுண்டானாவை தாண்டி செல்லாண்டிபாளையம் வழியாக பைபாஸ் சாலையை அடைந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த ரவுண்டானா வழியாக இரண்டு சக்கர வாகன போக்குவரத்தும் அதிகளவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போக்குவரத்தினை கட்டுப்படுத்தும் வகையில், ரவுண்டானா பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், அது இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Tirumandaiyur Roundana ,
× RELATED செவ்வாய்தோறும் மாநகராட்சி பகுதிகளில் முட்செடிகளை அகற்ற வேண்டும்