×

சங்கரன்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மகளிர் வாழ்வில் ஒளியேற்றியவர் ஜெயலலிதா அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு

சங்கரன்கோவில், பிப். 8: பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மகளிர் வாழ்வில் ஒளியேற்றியவர் ஜெயலலிதா என்று சங்கரன்கோவிலில் நடந்த விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி பேசினார்.சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கல் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மனோகரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: படித்த பெண்களுக்கு திருமணத்துக்கு உதவித்தொகை, தாலிக்கு தங்கம், இருசக்கர வாகனத்துக்கு மானியம், கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை  என பல்வேறு திட்டங்களை அறிவித்து மகளிர் வாழ்வில் ஒளியேற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகிறார். நிகழ்ச்சியில் 91 பெண்களுக்கு இருசக்கர வாகனங்களுக்கான உதவித்தொகையாக தலா ரூ.25 ஆயிரம், 102 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு வகையான தொழில்கள் செய்வதற்கு ரூ.4,74,77,000 வங்கி கடனும் வழங்கப்பட்டது.இதில் மாநில கூட்டுறவு விற்பனை இணைய துணை தலைவர் கண்ணன், அதிமுக நகர செயலாளர்கள் ஆறுமுகம், சங்கர், முன்னாள் தொகுதி செயலாளர் வேல்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன், சுப்பையா பாண்டியன், மாநில பேச்சாளர் கணபதி, பாசறை செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பெருங்கோட்டூரில் புதிய கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர் ராஜலட்சுமி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 200 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தையும் துவக்கி வைத்தார். இதேபோல் சாயமலையில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம், சிதம்பராபுரத்தில் புதிய கால்நடை மருந்தகமும் திறக்கப்பட்டது

Tags : Rajalakshmi ,Jayalalithaa ,women ,Sankarankovil ,
× RELATED நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் மறைவு முதல்வர் இரங்கல்