×

கரூர் அருகே துணிகரம் பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமி கைது

கரூர், பிப். 8: கரூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.கரூர் அருகே பெரியகோதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது தாய் குழந்தை அம்மாள் கடந்த வாரம் அப்பகுதியில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர் அவரை தாக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டார். இது குறித்து குழந்தை அம்மாள் அளித்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து செயினை பறித்து சென்ற ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சேது(43) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் குழந்தை அம்மாளிடம் செயின் பறித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.மணல் கடத்திய லாரி பறிமுதல்: கரூர் அருகே உள்ள மின்னாம்பள்ளி அருகே வாங்கல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ்லாரியில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து லாரி மற்றும் 3 யூனிட் மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டி வந்த நெரூர் வடபாகத்தை சேர்ந்த சந்துரு(24)என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் விழுந்த  வியாபாரி படுகாயம்:  கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள காட்டூரைச்  சேர்ந்தவர் தேவராஜ் (50), மாட்டு வியாபாரி. இவர் மாடு வியாபாரம் தொடர்பாக பைக்கில் திண்டுக்கல்  மாவட்டம், டி.கூடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த  30 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் தேவராஜ் தவறி விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு  அக்கம்பக்கத்தினர் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த தேவராஜை மீட்டு சிகிச்சைக்காக குஜிலியம்பாறை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இளம் பெண் கடத்தல்: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தொண்டாங்கிணம் ஊராட்சி எரிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (45). 8ம் வகுப்பு வரை படித்துள்ள இவரது 16 வயது மகள் கடந்த மாதம் 27ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். வேலைக்கு சென்றிருந்த சீரங்கன் வீடு திரும்பியபோது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காததால் தோகைமலை போலீசில் புகார் செய்தார். புகாரில்,  நெல்அறுக்கும் கொத்துக்காரரான மத்தகிரி ஊராட்சி ஆத்துப்பட்டியை சேர்ந்த இருளப்பன் மகன் மருதை (29) என்பவர் தனது மகளை கடத்தி சென்றுள்ளார் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.  இது குறித்து தோகைமலை  போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags : Asimi ,Chinni ,
× RELATED பட்டத்தால் எனக்கு பயம்: ஆர்ஜே பாலாஜி அலறல்