×

ஏர்வாடி அருகே பழுதான மின்கம்பம் மாற்றப்படுமா?

ஏர்வாடி, பிப். 6:ஏர்வாடி அருகே உள்ள புலியூர்குறிச்சி டோனாவூர் மெயின்ரோட்டில் கீழக்கட்டளைக்கு செல்லும் சந்திப்பில் மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் கான்கிரீட்டுகள் கீறல் விழுந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. பழுதடைந்த மின்கம்பம், அவ்வழியாக செல்லும் மின்கம்பியின் பிடியில்தான் உள்ளது. புலியூர்குறிச்சி கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு இந்த மின்கம்பத்தில்தான் மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. மின் இணைப்பில் பழுது ஏற்படும்போது வயர்மேன் இந்த மின்கம்பத்தில் ஏறும்போது விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் காற்று பலமாக வீசும்போது மின்கம்பம் சரிந்து விபத்து ஏற்படும் சூழ்நிலையில் உள்ளது. டோனாவூர், மாவடி, களக்காடு செல்லும் வாகனங்கள் இவ்வழியாக செல்வதால் மின்கம்பம் சரிந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு உடனடியாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Airwadi ,
× RELATED ஏர்வாடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்