×

வெள்ளிச்சந்தை, மணவாளக்குறிச்சியில் வாரண்டு கைதிகள் கைது

மணவாளக்குறிச்சி, பிப். 6: குளச்சல் காவல் உதவி கண்காணிப்பாளர் சரகத்திற்குட்பட்ட வெள்ளிச்சந்தை, மணவாளக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் வாரண்டு கைதிகளை கைது செய்ய ஏ.எஸ்.பி.கார்த்திக் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் வெள்ளிச்சந்தை  காவல் நிலையத்தில் ஒருவரை தாக்கிய வழக்கில் 7 வருடமாக தலைமறைவாகியிருந்த ஈசன்தங்குவை சேர்ந்த கிருஷ்ணசாமி (55), மற்றும் மணவாளக்குறிச்சி காவல்நிலைய திருட்டு வழக்கில் 11 வருடங்களாக தலைமறைவாக இருந்த சின்னவிளையை சேர்ந்த சகாயரெவி (45)ஆகிய இருவரையையும் கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

Tags : prisoners ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்