×

A 2.50 லட்சம் வழிப்பறி கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவரின் நண்பர் கைது

சுசீந்திரம், பிப். 6: டாஸ்மாக் சூப்பர் வைசர் வங்கியில் செலுத்த கொண்டு சென்ற A2.50 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.வடசேரி பகுதியில் கள்ள துப்பாக்கி வைத்திருந்ததாக குமரி மேற்கு மாவட்டம் சிரயான்குழி கண்ணாளபாட்டு விளையை சேர்ந்த அருள்சத்யூ(26) என்பவரை  போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்திய விசாரணையில், அருள்சத்யூ தனது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த நீலன்(27), விஜயகுமார், டைசன் ஆகியோருடன் சேர்ந்து கடந்த வருடம் நவம்பர் 2ம்தேதி சுசீந்திரம் அக்கரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக இருக்கும் முருகன் என்பவர் வங்கியில் செலுத்த கொண்டு சென்ற A 2.50 லட்சத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தெங்கம்புதூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் செல்வம், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தார். இதில் அவர் அருள்சத்யூ நண்பர் நீலன் என்பதும், அவர் தெங்கம்புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக்கடையில் கொள்ளைடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து நீலனை போலீசார் கைது செய்தனர்.

Tags : detainee ,
× RELATED தூத்துக்குடி முறப்பநாடு விஏஒ லூர்து...