×

திருநாவலூர் ஒன்றியத்தில்திமுக கிராம சபை கூட்டம்

உளுந்தூர்பேட்டை, பிப். 2:  உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒடப்பங்குப்பம், வானாம்பட்டு, கூ.கள்ளக்குறிச்சி, ஆரியநத்தம், மேப்புலியூர், பு.மாம்பாக்கம், நாச்சியார்பேட்டை, எ.குரும்பூர், நகர், ஆண்டிக்குழி, சேந்தநாடு உள்ளிட்ட கிராமங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருநாவலூர் ஒன்றிய திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் வசந்தவேல் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் சிவஜெயராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிராமத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும், கிராமங்களில் நீண்ட காலமாக செய்யப்படாமல் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் விளக்கி பேசப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் பழனி, செல்வராஜ், ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகம், ராமமூர்த்தி, குணசுந்தரி, குணசேகர், மாவட்ட பிரதிநிதி ஏழுமலை, இளைஞரணி அமைப்பாளர் வீரப்பன், முன்னாள் தலைவர்கள் குணசேகரன், ஜெயசீலன், முனாப்பு, அலெக்சாண்டர் உள்ளிட்ட கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை