×

மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கல்

உளுந்தூர்பேட்டை, பிப். 1:  உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பாண்டூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு கல்வி பயின்று வருகின்றனர். பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் காலை சிறப்பு வகுப்புக்கு வருபவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி நேரம் முடிந்து மாலை நேரத்தில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கும் பணி துவக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்தரசன் இதனை துவக்கி வைத்தா

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை