×

ராணிப்பேட்டை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 6 அடி நாகபாம்பு

ராணிப்பேட்டை, பிப்.1: ராணிப்பேட்டை அடுத்த பெல் குடியிருப்பு பி.607 என்ற பகுதியில் துரைசாமி(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெல் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டு சமையலறையில் 6 அடி நீளமுள்ள நாகபாம்பு ஒன்று புஸ் புஸ் என சத்தமிட்டபடி இருந்தது. இதனைக்கண்ட துரைசாமி அதிர்ச்சியடைந்தார். மேலும், இதுகுறித்து உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கோபால்சிங் தலைமையிலான வீரர்கள் விரைந்து ெசன்று பாம்பு பிடிக்கும் கருவிகள் மூலம் நாகபாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள அக்ராவரம் மலைமேடு வனகாப்புக் காட்டில் விட்டனர்.

Tags : area ,Ranipettai ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...