×

புளுதியூர் சந்தையில் மாடுகள் விற்பனை

அரூர், ஜன.31: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் வாரந்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்க வியாபாரிகள் வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் இறைச்சி மாடு ₹22,700 முதல் ₹46,500 வரையும், ஆடு ₹3,600 முதல் ₹6,900 வரையும் விற்பனையானது. மொத்தம் ₹24 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Puliyathi ,
× RELATED புளுதியூர் சந்தையில் 34 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை