×

வாலாஜாவில் மணல் கடத்திய 3 வாலிபர்கள் கைது

வாலாஜா,ஜன,31: வாலாஜா போலீசார் நேற்று ரபிக் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு மினிவேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் ராணிப்பேட்டை அடுத்த வடகால் பாலாற்றில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து, போலிசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜ்(29), சதிஷ்(22) ஆகியோரை கைது செய்து மணலுடன் மினிவேனை பறிமுதல் செய்தனர். இதேபோல், வாலாஜா சத்யா நகரில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய ராஜசேகர்(20) என்பவரை கைது செய்து மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : men ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்