×

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜன. 30: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் அடிப்படையில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தில் அடக்குமுறையை ஏவிவிடாமல் அவர்களை அழைத்து பேசி தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமோனன் தலைமை வகித்தார். தொமுச மாவட்ட செயலாளர் ஞானதாஸ், மாநில துணை செயலாளர் இளங்கோ, எச்எம்எஸ் மாவட்ட ெசயலாளர் முத்துகருப்பன், சிஐடியு மாநில செயலாளர் லட்சுமணன், மாவட்ட தலைவர் சிங்காரன், துணை தலைவர் அந்தோணி, மாநில செயலாளர் ஐடாஹெலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

Tags : unions ,teachers ,government employees ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...