×

மானூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

மானூர், ஜன. 30: இந்திய அரசு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இசை நாடகப்பிரிவு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சமூக நலத்துறை இணைந்து நடத்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மானூரில் நடந்தன. இதில் வில்லிபுத்தூரைச் சேர்ந்த கோடாங்கி கலை குழுவினர், பெண் கருக்கலைப்பு, சிசு கொலை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போஸ்கோ சட்டம், பெண் குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்கள், நலத்திட்டங்கள் போன்றவற்றின் கருத்துக்களை விளக்கினர். மானூர் ஒன்றிய அலுவலகத்தின் சமூக நலத்துறை முக்கிய சேவிகா வீரலெட்சுமி மற்றும் ஊர்நல அலுவலர்கள் சாரா, பாப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Girl Child Protection Awareness Concert in Manor ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது