×

புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஜன.24: மக்களிடையே ஆட்டிறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளதால், புதன்சந்தையில் நேற்று ஆடுகள் விலை உயர்ந்தது.நாமக்கல்  மாவட்டம், புதன்சந்தையில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. சுற்றுவட்டார  கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் ஆடு, கிடா மற்றும்  குட்டிகளை விற்பனைக்கு ஓட்டி வந்திருந்தனர். இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம்,  எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். மக்களிடையே இறைச்சி  நுகர்வு அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.  இதனால் சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்தது. இதனால் கடந்த வாரம் ₹4,500க்கு  விற்பனையான 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு நேற்று ₹4,600க்கு விற்பனையானது.  அதுபோல் ₹3,600க்கு விற்பனையான வளர்ப்பு ஆடுகள் ₹3,700க்கும், பிறந்து ஒரு மாதமே  ஆன பெண்குட்டி ஆடு ₹900க்கும், கிடா குட்டி ₹1000க்கும் விற்பனையானது.


Tags : Budhana ,
× RELATED புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு