×

சங்கராபுரத்தில் டி.எஸ்.பி அலுவலகம்

சங்கராபுரம், ஜன. 4:  விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவின் தலைநகரமாகும். இதனை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. சங்கராபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு ஆகிய மூன்று காவல் நிலையங்கள் உள்ளது. மேலும் இதனுடன் பகண்டைகூட்ரோடு காவல் நிலையம் மற்றும் ரிஷிவந்தியம் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களை கொண்டு சங்கராபுரம் தலைமையிடமாக கொண்டு காவல் உட்கோட்டமாக பிரித்து சங்கராபுரதத்திற்கு புதிய காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். சங்கராபுரம் சரகத்திற்குட்பட்ட மூன்று காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் எந்த ஒரு அலுவலக கூட்டமாக இருந்தாலும் 40கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்கோவிலூரில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
 இதனால் அந்த நேரங்களில் பணிகள் முழுமையாக பாதிக்கப்படுகின்றது. மேலும் விழுப்புரம் மாவட்டத்திலேயே சங்கராபுரம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் அடிக்கடி நடைபெறும் சம்பவங்களில் டி.எஸ்.பி உடனுக்குடன் வந்து கண்காணிக்க காலதாமதம் ஏற்படுகின்றது. எனவே சங்கராபுரத்தை தலைமையிடமாக கொண்டு சங்கராபுரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : DSB ,office ,Sankarapuram ,
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...