×

விரியூரில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கும் அவலம்

சங்கராபுரம்,  ஜன. 4:  சங்கராபுரம் அடுத்துள்ளது விரியூர் கிராமம். இந்த கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த கிராமத்தை சுற்றி சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் விரியூரில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு வந்து சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அந்த ஆரம்ப துணை சுகாதார நிலையம் பயனற்ற நிலையில் இருக்கின்றது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் உள்ளது.  இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாததால் அப்பகுதியில் விரியூர், பழையனூர், ராமராஜபுரம், வாளையாம்பட்டு, குச்சிக்காடு, அரசராம்பட்டு, கல்லேரிக்குப்பம் உட்பட பல கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி செல்ல வேண்டிய அவலநிலையுள்ளது. இதனால், கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sub-health care center ,
× RELATED விரியூரில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கும் அவலம்