×

கல்லூரி மாணவி கடத்தல்: வாலிபர் மாயம்

திருவெண்ணெய்நல்லூர், டிச. 25:    திருவெண்ணெய்நல்லூர் அருகே தனித்தனி சம்பவத்தில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டார். வாலிபர் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மண்டகமேடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் யாழினி(18) (பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் ஜெயங்கொண்டம் அடுத்த தத்தனூர் பகுதியில் உள்ள கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வாரந்தோறும் விடுமுறை நாளன்று வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த யாழினி அவரின் அண்ணன் பிரகாஷிடம் கல்லூரியில் படிக்கும் சுபாஷ் என்பவர் தன்னை காதலித்து வருவதாக கூறி ஒரு வருடமாக தொந்தரவு செய்து வருவதாகவும், அதை நான் மறுத்ததற்கு என்றாவது ஒரு நாள் உன்னை கடத்தி சென்று விடுவதாக மிரட்டுவதாக கூறியுள்ளார்.

 இந்நிலையில், கடந்த 17ம் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து சென்ற யாழினி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் யாழினியின் சகோதரன் பிரகாஷ் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் சுபாஷ் மீது புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    வாலிபர் மாயம்:  திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் கூத்தப்பன்(33), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7ம் தேதி இருவேல்பட்டு கிராமத்தில் உள்ள அவரின் தாத்தா வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரின் தாயார் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : magician ,
× RELATED சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பிரபல...