×

பாமக ஆலோசனை கூட்டம்

உளுந்தூர்பேட்டை, டிச. 20:  உளுந்தூர்பேட்டை தொகுதியில் வரும் 27ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆட்சி மாற்றத்திற்கான ஆயத்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைலர் ஜி.கே.மணி, நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொள்ள நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தீபக் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பழனி, சக்திவேல், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரும் 27ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை தொகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொள்வது என முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் நேரு, தென்றல்பாலு, பழனிவேல், அருள்மணி, ராஜேந்திரன், ரஞ்சித்குமார், பாண்டியன், ராமர், பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Manga consultation meeting ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை