×

பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

பாலக்கோடு, டிச.19: மாரண்டஅள்ளி ேபரூராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பற்றி எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை சாலையில், குப்பை கிடங்கு உள்ளது. இங்கு பேரூராட்சியில் தினமும் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், திடீரென குப்பை கிடங்கில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், பேரூராட்சி ஊழியர்களுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி ஊழியர்கள், பாலக்கோடு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், குப்பை கிடங்கில் தானாக தீப்பற்றியதா? அல்லது யாராவது தீ வைத்து சென்றனரா என மாரண்டஅள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். பேரூராட்சி குப்பை கிடங்கு திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : fire ,Marathalli ,garbage warehouse ,Balakode ,
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து