×

சோளிங்கர் அருகே பரபரப்பு ராணுவ வீரர் மீது துப்பாக்கி சூடுகாலில் குண்டு பாய்ந்து படுகாயம்


வேலூர், டிச.19: சோளிங்கர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் காலில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா(40), ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருமாத விடுமுறையில் சொந்த ஊரான போளிப்பாக்கம் கிராமத்திற்கு வந்திருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது சொந்த வேலை காரணமாக பைக்கில் சோளிங்கருக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக்ெகாண்டிருந்தாராம். புலிவலம் அருகே வந்தபோது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்துக்கொண்டிருந்தபோது மர்ம நபர் யாரோ நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் பாரதிராஜாவின் காலில் குண்டு பாய்ந்தது.

வலி தாங்கமுடியாமல் அலறி துடித்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குபதிந்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் யார்? வனவிலங்குகளை வேட்டையாட வந்தபோது, தவறுதலாக பாரதிராஜாவை சுட்டனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.யில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த இளம்பெண்ணின் அண்ணன், முருகனை பிடித்து தர்மஅடி கொடுத்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் முருகனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Tags : firing squad ,Sholingar ,
× RELATED சோளிங்கர் அருகே சிலிண்டர் வெடித்த...