கரூர், டிச. 18: கரூர் சணப்பிரட்டியை சேர்ந்தவர் காமராஜ் (58). இவரின் வீட்டின் பின்புறம் கட்டி யிருந்த இரண்டு ஆடுகளை, கரூர் பஞ்சமாதேவியை சேர்ந்த தங்கத்துரை என்பவர் டூ வீலரில் கடத்த முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள் , தங்கத்துரையை பிடித்து பசுபதிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தங்கதுரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.