×

இளம்பெண் கடத்தல்

திருக்கோவிலூர், டிச. 16: திருக்கோவிலூர் அடுத்த சோழவாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(16).(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து அங்குள்ள கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் அவரை பல இடங்களில் தேடியும்  கிடைக்கவில்லை. இது குறித்து செல்வியின் தந்தை திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். அதில் அதே ஊரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் அஜீத்குமார்(27) என்பவர் கடத்திச்சென்றதாக கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட செல்வியையும், அவரை கடத்திச்சென்ற அஜீத்குமாரையும் தேடி வருகின்றனர்.

Tags : Kidnapping teen ,
× RELATED குடியாத்தத்தில் இளம்பெண் காரில் கடத்தல்